Saturday, December 25, 2021

2021க்கான நன்றி கூறுதல் : ஸ்பான்ஸர்களுக்கு சிறப்பு நன்றிகள்

2021க்கான நன்றி கூறுதல் : ஸ்பான்ஸர்களுக்கு சிறப்பு நன்றிகள்

1. தத்வ சுவ்வாலி
2. ஜகன்னாத தாசர் கட்டுரைகள்
3. வைகுண்ட வர்ணனெ
4. ஸ்ரீவிஜயதாசரின் 25 சுளாதிகள்
5. குண்டக்ரியெ + 2 புத்தகங்கள்

2021 ஆகஸ்டிலிருந்து டிசம்பர் வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 400 பக்கங்களுக்குக் குறையாத புதிய தமிழ்ப் புத்தகங்கள் ஸ்ரீஹரிவாயு குருகளின், ஹரிதாசர்களின் அருளால் வந்திருக்கின்றன. 

நமக்கு பொருளுதவி செய்து, இந்த புத்தகங்களை குறைந்த விலையில் வெளியிட உதவி செய்த ஹரிபக்தர்கள் - ஸ்பான்சர்ஸ் - நண்பர்களுக்கு, மிகவும் முக்கியமாக நன்றிகளை கூற கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுடைய உதவி இல்லையெனில், தமிழில் இத்தகைய அரிய புத்தகங்கள் வந்திருக்காது.

அருமையான சாகித்ய சேவை செய்திருக்கும் அவர்களுக்கு ஹரிவாயு குருகளின் ஹரிதாசர்களின் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 

மேலும் சிலர் தொடர்ந்து பொருளுதவி செய்வதால் / செய்வதாக சொல்லியிருப்பதால், இன்னும் பல புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும், மொழிபெயர்க்க வேண்டும் என்றும் உற்சாகம் வந்திருக்கிறது. 2022ம் ஆண்டும் இதே போல புத்தக வெளியீடுகள் இருக்க வேண்டும் என்று (பாரதிரமண முக்யபிராணாந்தர்கத) பிம்பமூர்த்தியை வணங்கிக் கொள்கிறேன். 

ஹரிகதாம்ருதசார உரையான பாவபிரகாசிகை குறைந்த பட்சம் 1000 A4 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதனை இதுவரை புத்தகமாக வெளியிட முடியாமல் இருக்கிறது. ஸ்ரீஹரியின் அருளால் அதுவும் இந்த 2022ம் ஆண்டில் முடிகிறதா என்று பார்ப்போம். 

நாஹம் கர்தா ஹரி: கர்தா
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
சத்ய நாராயணன்
ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ்
8904458276

2 comments:

  1. ஶ்ரீஹரி வாயு புலிகளின் அனுக்ரஹத்தால்ேமலும்மேலும் பல தாஸயதிகளின் க்ரந்ங்களை தமிழில்வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குஉள்ளது ஜிரா

    ReplyDelete
  2. Please read as " குருகளின்"

    ReplyDelete

ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம்

 ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ் பெங்களூரு 18.06.2026 ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால், இன்றோடு நமது குரு எனக்கு...