Thursday, December 30, 2021

2021க்கான நன்றி கூறுதல் : புத்தகங்களை வாங்கியவர்களுக்கு.

2021க்கான நன்றி கூறுதல் : புத்தகங்களை வாங்கியவர்களுக்கு.

புத்தகங்களை பதிப்பித்தால் மட்டும் போதுமா, அதை ஆர்வத்துடன் வாங்கி படிப்பவர்கள் இருந்தால்தானே, அடுத்தடுத்த புத்தகங்கள் வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆகவே, அப்படி நம் புத்தகங்களை வாங்கிப் படித்தவர்களுக்கு இந்த 2021 ஆண்டின் இறுதியில் சிறப்பு நன்றிகள். அப்படி வாங்கிய புத்தகங்களைப் பற்றிய கமெண்ட்ஸும் பலர் அழைத்துச் சொல்வதுண்டு. அவற்றில் சில:

* தத்வ சுவ்வாலி புத்தகம் ஒரு பொக்கிஷம். 

* ஜகன்னாததாசர் கட்டுரைகள் - is a gem of a book.

* ஸ்ரீவாதிராஜரின் கிரந்தங்கள் அனைத்தும் அருமை. எல்லாவற்றையும் hard-bind செய்து என் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கே கொடுக்கணும். 

* உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் கிடைக்கும்போது வாங்கிவிடுகிறேன். மெதுவாக நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக படிப்பேன். 

* உங்கள் புத்தகங்களுக்காக ஒரு தனி அலமாரியையே ஒதுக்கி விட்டேன். எந்தப் புத்தகம் வந்தாலும் எனக்கு கண்டிப்பாக ஒரு செட் அனுப்பி விடவும். 

* என் மேஜை முழுக்க உங்கள் புத்தகங்களே. ஒன்று மாற்றி ஒன்று படிக்கிறேன். 

இவை தவிர, புத்தகங்களைப் படித்து அதில் சந்தேகங்களைக் கேட்பவர்களும் சிலர் உண்டு.

* வைகுண்ட வர்ணனெ கிரந்தத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கவனமாக படித்து, அவ்வப்போது தொலைபேசி அதில் சந்தேகங்களைக் கேட்கும் ஹரிபக்தர் ஒருவர்.

* ஷட்சரண பத்யமாலா ஒரு பத்யத்தில் உள்ள வரிகள் மிக அழகு என்று சொல்லி, அதன் விளக்கத்தைக் கேட்கும் பக்தர் ஒருவர்.

என பல அழைப்புகள். 

ஹரிவாயுகுருகளின் புத்தகங்களைப் பற்றி படிப்பது, எழுதுவது, பேசுவது என அனைத்தும் மகிழ்ச்சியையே கொடுப்பவை. இவ்வாறு இதுவரை புத்தகங்களை வாங்கிய, இனி வாங்கப் போகும் அனைவருக்கும் மிக்க நன்றிகள். 

ஹரிவாயுகுருகளின் ஹரிதாசர்களின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று சொல்லி, அடுத்த மாத வெளியீடுகளின் விவரங்கள் விரைவில் வரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். 

நன்றி. ஹரே ஸ்ரீனிவாஸா.

சத்ய நாராயணன்

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு

8904458276

***



Saturday, December 25, 2021

2021க்கான நன்றி கூறுதல் : ஸ்பான்ஸர்களுக்கு சிறப்பு நன்றிகள்

2021க்கான நன்றி கூறுதல் : ஸ்பான்ஸர்களுக்கு சிறப்பு நன்றிகள்

1. தத்வ சுவ்வாலி
2. ஜகன்னாத தாசர் கட்டுரைகள்
3. வைகுண்ட வர்ணனெ
4. ஸ்ரீவிஜயதாசரின் 25 சுளாதிகள்
5. குண்டக்ரியெ + 2 புத்தகங்கள்

2021 ஆகஸ்டிலிருந்து டிசம்பர் வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 400 பக்கங்களுக்குக் குறையாத புதிய தமிழ்ப் புத்தகங்கள் ஸ்ரீஹரிவாயு குருகளின், ஹரிதாசர்களின் அருளால் வந்திருக்கின்றன. 

நமக்கு பொருளுதவி செய்து, இந்த புத்தகங்களை குறைந்த விலையில் வெளியிட உதவி செய்த ஹரிபக்தர்கள் - ஸ்பான்சர்ஸ் - நண்பர்களுக்கு, மிகவும் முக்கியமாக நன்றிகளை கூற கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுடைய உதவி இல்லையெனில், தமிழில் இத்தகைய அரிய புத்தகங்கள் வந்திருக்காது.

அருமையான சாகித்ய சேவை செய்திருக்கும் அவர்களுக்கு ஹரிவாயு குருகளின் ஹரிதாசர்களின் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 

மேலும் சிலர் தொடர்ந்து பொருளுதவி செய்வதால் / செய்வதாக சொல்லியிருப்பதால், இன்னும் பல புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும், மொழிபெயர்க்க வேண்டும் என்றும் உற்சாகம் வந்திருக்கிறது. 2022ம் ஆண்டும் இதே போல புத்தக வெளியீடுகள் இருக்க வேண்டும் என்று (பாரதிரமண முக்யபிராணாந்தர்கத) பிம்பமூர்த்தியை வணங்கிக் கொள்கிறேன். 

ஹரிகதாம்ருதசார உரையான பாவபிரகாசிகை குறைந்த பட்சம் 1000 A4 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதனை இதுவரை புத்தகமாக வெளியிட முடியாமல் இருக்கிறது. ஸ்ரீஹரியின் அருளால் அதுவும் இந்த 2022ம் ஆண்டில் முடிகிறதா என்று பார்ப்போம். 

நாஹம் கர்தா ஹரி: கர்தா
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
சத்ய நாராயணன்
ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ்
8904458276

2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...