Thursday, December 30, 2021

2021க்கான நன்றி கூறுதல் : புத்தகங்களை வாங்கியவர்களுக்கு.

2021க்கான நன்றி கூறுதல் : புத்தகங்களை வாங்கியவர்களுக்கு.

புத்தகங்களை பதிப்பித்தால் மட்டும் போதுமா, அதை ஆர்வத்துடன் வாங்கி படிப்பவர்கள் இருந்தால்தானே, அடுத்தடுத்த புத்தகங்கள் வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆகவே, அப்படி நம் புத்தகங்களை வாங்கிப் படித்தவர்களுக்கு இந்த 2021 ஆண்டின் இறுதியில் சிறப்பு நன்றிகள். அப்படி வாங்கிய புத்தகங்களைப் பற்றிய கமெண்ட்ஸும் பலர் அழைத்துச் சொல்வதுண்டு. அவற்றில் சில:

* தத்வ சுவ்வாலி புத்தகம் ஒரு பொக்கிஷம். 

* ஜகன்னாததாசர் கட்டுரைகள் - is a gem of a book.

* ஸ்ரீவாதிராஜரின் கிரந்தங்கள் அனைத்தும் அருமை. எல்லாவற்றையும் hard-bind செய்து என் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கே கொடுக்கணும். 

* உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் கிடைக்கும்போது வாங்கிவிடுகிறேன். மெதுவாக நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக படிப்பேன். 

* உங்கள் புத்தகங்களுக்காக ஒரு தனி அலமாரியையே ஒதுக்கி விட்டேன். எந்தப் புத்தகம் வந்தாலும் எனக்கு கண்டிப்பாக ஒரு செட் அனுப்பி விடவும். 

* என் மேஜை முழுக்க உங்கள் புத்தகங்களே. ஒன்று மாற்றி ஒன்று படிக்கிறேன். 

இவை தவிர, புத்தகங்களைப் படித்து அதில் சந்தேகங்களைக் கேட்பவர்களும் சிலர் உண்டு.

* வைகுண்ட வர்ணனெ கிரந்தத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கவனமாக படித்து, அவ்வப்போது தொலைபேசி அதில் சந்தேகங்களைக் கேட்கும் ஹரிபக்தர் ஒருவர்.

* ஷட்சரண பத்யமாலா ஒரு பத்யத்தில் உள்ள வரிகள் மிக அழகு என்று சொல்லி, அதன் விளக்கத்தைக் கேட்கும் பக்தர் ஒருவர்.

என பல அழைப்புகள். 

ஹரிவாயுகுருகளின் புத்தகங்களைப் பற்றி படிப்பது, எழுதுவது, பேசுவது என அனைத்தும் மகிழ்ச்சியையே கொடுப்பவை. இவ்வாறு இதுவரை புத்தகங்களை வாங்கிய, இனி வாங்கப் போகும் அனைவருக்கும் மிக்க நன்றிகள். 

ஹரிவாயுகுருகளின் ஹரிதாசர்களின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று சொல்லி, அடுத்த மாத வெளியீடுகளின் விவரங்கள் விரைவில் வரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். 

நன்றி. ஹரே ஸ்ரீனிவாஸா.

சத்ய நாராயணன்

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு

8904458276

***



No comments:

Post a Comment

2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...